அழகன்

நானும் அழகனாய் உணர்ந்தேன்
உன்னை செல்லப் பெயரால் அழைக்கும்போது
நீ…
என் கன்னம் கிள்ளுகையில்

நானும் அழகனாய் உணர்ந்தேன்
சாலையை கடக்கும்போது
நீ…
ஓடிவந்து என் கை பிடிக்கையில்

நானும் அழகனாய் உணர்ந்தேன்
என் தோளில்
நீ…
தலை சாய்த்து பயணிக்கையில்.

Follow

Get every new post delivered to your Inbox.