கதை சொல்லுங்களேன் ப்ளீஸ்…
August 26, 2010 Leave a comment
எப்பொவும் போல தான் அன்னிக்கும் இந்த பஸ் பயணம் ஆரம்பமாச்சு… பெங்களுருல இருந்து எங்க ஊருக்கு போறதுங்கறது ஒரு முழு night தூக்கத்த தாரை வார்த்துக் குடுக்கிற மதிரி தான். வழக்கம் போல Shanthi nagar bus stand ல அரை மணி முன்னதாவே போய் நின்னுட்டேன். ஏற்கனவே ரெண்டு நாள் தூக்கம் கண்ணைக்கட்டி வர… அரை உணர்ச்சில தான் நின்னுட்டு இருந்தேன்.
நம்ம bus வந்தவுடனே முதல் ஆளா ஏறிப்போய் உட்கார்ந்து தூக்கத்துக்குத் தயாரானேன். இந்த மாதிரி பயணங்களில் எல்லாம் கடந்த ஒரு வருஷமா காதுல MP3 Player ஒன்னோட Headset அ மாட்டிட்டே தான் பயணம் செய்றது வசக்கமாயிட்டது. நம்ம தூங்கினாலும் அந்த பாட்டு கேக்குற பொட்டிய மட்டும் தூங்க விடறதே இல்ல.
அந்தா இந்தான்னு வண்டி நகர மேலும் ஒரு 30 நிமிஷம் ஆக, அப்படியே லேசா கண்ணசர ஆரம்பிச்சேன்… கள்வரே கள்வரே பாட்டு மெதுவா கசிய தாலாட்டு ஆரம்பமாச்சு. அடுத்ததா கேளடி கண்மனி கேட்ட மாதிரி ஒரு feel… தூங்கிட்டேன்னு நினைக்கிறேன்.
ஏதோ ஒரு லாரிக்காரன் புண்ணியவான் சத்தமா ஹாரன் (அது ஹாரனா இல்ல சைரன்-னான்னு கடவுளுக்குத் தான் தெரியும்) அடிக்க நம்ம தூக்கம் போயே போச்சு. அப்புறம் வரிசையா 10-15 பாட்டு கேட்டு முடிச்சுட்டேன், தூக்கமே வரல… இப்போ தான் லைட்டா தலை வலி ஆரம்பமாச்சு. இந்த தலை வலிக்குக் காரணம் தூக்கம் கெட்டதா, இல்லை இந்த பாட்டு எல்லாம் சேர்ந்து ஏதோ செய்யுதான்னு ஒரே குழப்பம். ஆஹ தலை வலி இன்னும் அதிகமாயிடுச்சு.
இன்னும் (விஷயம்) ஒண்ணுமே வரலையேன்னு வடிவேலு மாதிரி நீங்க கேக்குறது புரியுது. சரி விசயத்துக்கு வாறேன். நான் இப்போ கேட்ட பாட்டு எல்லாம் சேர்ந்து ஏதோ கதை சொல்ற மாதிரி ஒரு feel. ஆனா என்ன கதைன்னு தான் தெரியல. அந்தக் கதை என்னன்னு யோசிச்சு யோசிச்சு தான் தலை வலி வந்துடுச்சு. இதுல பாட்டு சேர சேர வலி அதிகமாயிட்டே போயிடுச்சு. கீழ இருக்கிறது தான் அந்தப் பாட்டு list.
கள்வரே கள்வரே – ராவணன்
கேளடி கண்மணி – புதுப் புது அர்த்தங்கள்
இது ஒரு பொன்மாலைப் பொழுது – நிழல்கள்
Fashion का जलवा – Fashion
மெட்டி ஒலி காற்றோடு - மெட்டி
எங்கெங்கோ கால்கள் – நந்தா
ராக்கோழி ரெண்டு முழிச்சிருக்கு – உழவன்
ॐ मंगलम – कमबख्त इश्क
அனல் மேலே பனித்துளி – வாரணம் ஆயிரம்
மாரீச்சம் யாதோ – சில்லுனு ஒரு காதல்
Theme of fashion – Fashion
ಗುಡುಗುಡಿಯ ಸೇದಿ ನೋಡು
சங்கீத ஜாதி முல்லை – காதல் ஓவியம்
the cholan ecstacy – ஆயிரத்தில் ஒருவன்
கல்யாண மாலை - புதுப் புது அர்த்தங்கள்
இளமை உல்லாசம் – உன்னாலே உன்னாலே
मिले सुर
கண்ணில் தாகம் தீருமோ – அச்சமுண்டு அச்சமுண்டு
என் உயிரே – Bombay
ಮುಂಜಾನೆ ಮಂಜಲ್ಲಿ - Just Math Mathalli
விடிகின்ற பொழுது - ராம்
ஒ மனமே – உள்ளம் கேட்குமே
பிள்ளை நிலா – நீங்கள் கேட்டவை
அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல – வாரணம் ஆயிரம்
நான் அலிபாபா தங்கம் – பொல்லாதவன்
हे भगवन
ராஜா ராஜா சோழன் - ரெட்டை வால் குருவி
என்னடா இவன் 10-15௦ ன்னு சொல்லிட்டு 25-30௦ க்கு மேல list போட்டிருக்கான்னு பாக்குறீங்களா?
அப்பப்போ துக்கத்துல இருந்து எழுந்திருக்கும் போது ஒரு 2-3 பாட்டு மனசுல பதிஞ்சிட்டது, அதான் list எகிறிட்டது. இப்படியே நைட் full a ஓட்டிட்டாலும், காலைல வீடு வந்து சேரும் வரை அந்த கதை மட்டும் புடி படவே இல்லை.
யாராச்சும் அந்த கதை என்னன்னு கண்டு பிடிச்ச சொல்லுங்களேன் ப்ளீஸ்…
உட்காந்து யோசிப்பாய்ங்களோ ன்னு நீங்க சொல்றது கேட்குது
Recent Comments