‘அன்பே வா‘ கவிதைகள்…
December 20, 2009 Leave a comment

உலகெல்லம் ஓடி
உன் காதல் நீ தேட…
பத்திரமாய் உன் காதல்
ஒளிந்திருக்கும் எனக்குள்
நீ தான் நான் என
நான் கண்டுகொண்டேன்…
நான் தான் நீ என
நீ அறிவதெப்போது…
********************************
வார்த்தை இல்லாமல்
வாய்ப்பு இல்லாமல்
உன் வட்ட விழி பார்க்க
இயலாமல்…
சொல்லாத காதலொன்று
சிக்கிக் கிடக்கிறது
என் நெஞ்சுக்குழிக்குள்
நீயே சொல்லிவிடேன்…
காதலை
முன்மொழியத்தான்
முடியவில்லை…
வழிமொழிந்தாவது
விடுகிறேன்
********************************
எல்லாம் ‘அன்பே வா‘ கவிதைகள்…
Thanks to Vijay TV and Anbe Va
Recent Comments